தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் விசாரணை
சென்னை:
தமிழகத்தின் தற்காலிக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் சி. ரங்கராஜன், தமிழக தலைமைச் செயலாளரிடம்தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணை செய்தார்.
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் ஆந்திர மாநில ஆளுநர் ரங்கராஜன்,தமிழகத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் தற்காலிகஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றார்.
புதன்கிழமை தமிழக தலைமைச் செயலளார் சங்கரை ராஜ்பவனுக்கு அழைத்த ரங்கராஜன், கருணாநிதி கைதுதொடர்பான ஆவணங்களையும் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் படி, கருணாநிதி கைது தொடர்பான ஆவணங்களுடன் சென்று ஆளுநரைச் சந்தித்தார் சங்கர்.ஆவணங்ரகளை ஆராய்ந்த ஆளுநர், சங்கரிடம் சில விளக்கங்கள் கேட்டார்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் தலைமைச் செயலாளரிடம் கேட்டு ஆளுநர் தெரிந்து கொண்டார்.
பதவி ஏற்ற மறுநாளே ஆந்திரா சென்று விடுவார் என எதிர் பார்க்கப்பட்ட ரங்கராஜன், இன்னும் தமிழகத்திலேயேதங்கி, தமிழக நிலையை ஆராய்ந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications