கடும் நடவடிக்கை வரும்: மத்திய அரசு எச்சரிக்கை
சென்னை:
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை தமிழக அரசு மீறினால்அடுத்த கட்டமாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. எச்சரித்துள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், பா.ஜ.கவின் தேசியச் செயலாளருமான வெங்கைய்யா நாயுடுசென்னையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
முன்னதாக கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய வெங்கைய்யா நாயுடு பின்னர் நிருபர்களைச்சந்தித்தார்.
அவர் கூறுகையில், கருணாநிதியிடம் போலீசார் மிக முரட்டுத்தனமாக நடந்துள்ளனர். மத்திய அமைச்சர்களை தரக்குறைவாக நடத்தியுள்ளனர்.
இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால், நடவடிக்கை எடுக்க முடியாது என காவல்துறை டி.ஜி.பி. கூறியுள்ளதாக செய்தி வருகிறது.
மத்திய அரசின் உத்தரவை மீறினால், மிகக் கடுமையான நடவடிக்கை வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்றார் வெங்கைய்யா நாயுடு.












Click it and Unblock the Notifications