For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாத்திமா பீவி நீக்கம்: முன்னாள் ஆளுநர்கள் அதிருப்தி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழகத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து ஆளுநராகப் பொறுப்பு வகித்த பாத்திமாபீவியைப் பதவிநீக்கம் செய்தது தவறு என்று முன்னாள் ஆளுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள்கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

கூட்டத்தில் தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவியை நீக்கியது தவறு என்று கருத்துக் கூறப்பட்டது.

இதையடுத்து முன்னாள் ஆளுநர்கள் வெளியிட்ட அறிக்கையில், தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவிஜனாதிபதிக்கு அனுப்பிய அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்ட செயல் முறையற்றது என்றும் பாத்திமா பீவிவெளியிட்ட அறிக்கையை வெளியிட்ட பிறகும் மத்திய அரசு அரசியல் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டுள்ளதுஎன்றும் அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

கூட்டம் முடிந்தபின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கரண்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆளுநர்மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருக்கக் கூடாது. ஆளுநர் சுதந்திரமாகஅறிக்கை தயாரித்து வெளியிட்டிருக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.அவர் கூறுவது போல் ஆளுநர் சுதந்திரமாகச் செயல்படக் கூடியவர் அல்ல என்றார்.

கூட்டத்தில் முன்னாள் ஆளுநர்கள் மோதிலால் வோரா, ஏ.ஆர்.கித்வாய், குர்ஷித் ஆலம், முகமது ஷபி குரேஷிமற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் அம்பிகா சோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X