ஜெ. மனுவை நிராகரித்த ஜெயா அதிரடி மாற்றம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி ஜெயா திடீர் மாற்றம்செய்யப்பட்டார். அவருக்குப் பதில் புலமாடன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அதிகாரியான ஜெயாதான் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆண்டிப்பட்டி தொகுதிதேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றினார். சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில்போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால், ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றிருந்ததால் அவரது மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்துஜெயா மற்றும் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. அவர்களுக்குத் தீவிரபாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் முடிந்து அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதாவும்முதல்வராகி விட்டார். தற்போது அவர் 6 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும். இந்தச்சூழ்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த ஜெயாவை இடமாற்றம் செய்துள்ளது அரசு. அவருக்கு வேறுபணி எதுவும் கொடுக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். ஜெயா இடத்தில் புலமாடன் என்பவர்நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடலாம் என்று கருதப்படுவதால் அவர் போட்டியிட எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெயா இருந்தால் மீண்டும் வேட்பு மனுவைதள்ளுபடி செய்யலாம் என்று அதிமுக தரப்பில் கருதப்பட்டது. இதையடுத்தே அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என்றுகூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications