பிரதமருடன் மாறன் சந்திப்பு: ஜெ. அரசை கலைக்கக் கோரிக்கை?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயை மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
கருணாநிதியோடு கைது செய்யப்பட்ட மாறன் காயமடைந்து அப்பல்லோ மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.வாஜ்பாயின் நெருக்குதலால் அவரை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை விடுதலை செய்தார்.
இதையடுத்து டெல்லி சென்ற மாறன் வாஜ்பாயையும் மூத்த பா.ஜ.க. தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது கருணாநிதி வீட்டிலும் தன் வீட்டிலும் போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து பிரதமரிடம் மாறன்விளக்கினார். மாறன் கூறியதை மிகுந்த வருத்தத்துடன் கேட்டுக் கொண்டார்.
ஜெயலலிதா அரசு மீது நடவடிக்கை எடுத்தற்கு மாறன் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் ஜெயலலிதா அரசைக்கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் பிரதமர் முன் வைத்தாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications