இலங்கையிலிருந்து 15 அகதிகள் தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து 15 அகதிகள் படகு மூலம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதால்சண்டை நடக்கும் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 3 ம் தேதி இலங்கை மன்னார் அருகேயுள்ள ஓலத்தொடுவாய் கிராமத்திலிருந்து, 15 அகதிகள் படகு மூலம்தப்பித்து வந்தனர்.
அவர்கள் படகு ஓட்டி வந்தவர்களுக்கு ரூ.12,000 கொடுத்துதான் தமிழகம் வந்தனர்.
அதிலும் அவர்கள் நடுக்கடலிலேயே இறக்கிவிடப்பட்டனர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் தனுஷ்கோடிபோலீஸார் அந்த 15 பேரையும் மீட்டனர். தமிழகத்துக்குத் தப்பித்து வந்த 15 அகதிகளில் ஒரு கைக்குழந்தையும், 8பெண்களும் அடங்குவர்.












Click it and Unblock the Notifications