ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து? அதிகாரிகள் ஆய்வு
மதுரை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுஇருக்கும் சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினின் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்தது தொடர்பான வழக்கில் நீதிபதியிடம் சரணடைந்த போதேஸ்டாலின் தன் உயிருக்கு மத தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார்.
மதுரை சிறையில் ஸ்டாலின்:
ஸ்டாலின் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மதுரை சிறையில் மத தீவிரவாதிகள் சிலர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய ஜிகாத் கமிட்டி முன்னாள் தலைவர் குனங்குடி அனீபாவும், ராமநாதபுரத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த ராமரைகொலை செய்ததாக கைதாகி இருக்கும் அல் - உம்மா அமைப்பின் அபுதாகீரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தீவிரவாதிகள் ஸ்டாலின் இருக்கும் பிளாக்குக்கு செல்ல வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் தீவிரவாதிகளால் ஸ்டாலின் உயிருக்குஆபத்து வருமா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications