ஜூலை 25 ல் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
டெல்லி:
மத்திய அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வரும் 25 ம்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.
உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் வற்புறுத்தலின்பேரில் பொதுத்துறை நிறுவனங்களில்உள்ள அரசின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டத்தையும், ஊழியர்களை குறைப்பது, சில பதவிகளை ஒழிப்பது,தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்வது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக அரசு ஊழியர்சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளன.
வேலை நிறுத்தம்:
அரசின் இந்தப்போக்கைக் கண்டித்து இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 95 லட்சம் பேர் வருகிற 25 ம்தேதி வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
முன்னதாக, 18 ம் தேதி தனியார் மய எதிர்ப்பு தினம் கடைபிடிக்கிறார்கள். அன்று இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களும்,பேரணிகளும் நடத்துகிறார்கள்.
இந்தத் தகவல்களை மத்திய அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கே.வியாஸ், அகிலஇந்திய மாநில அரசு ஊழியர்கள் பேரவையின் பொதுச்செயலாளர் சுகோமால்சென் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications