கம்ப்யூட்டர் படிப்புக்கு மவுசு குறைந்தது
சென்னை:
தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில், இந்த ஆண்டு கம்ப்யூட்டர் படிப்புக்கான மவுசு மாணவர்களிடையேகுறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மாணவர்கள் காட்டிய ஆர்வம் கூட இந்த ஆண்டு காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. சென்றஆண்டு வரை, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் துடியாகத் துடித்தனர்.
சென்ற ஆண்டுகளில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பங்கள் மலை போலக் குவிந்து கிடக்குமாம்.ஆனால் இந்த ஆண்டு இந்தப் படிப்பை மாணவ-மாணவிகள் சீண்டக் கூடவில்லை.
என்ன காரணமாம்? கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு கிடைப்பதில்லைஎன்பதுதான் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படிப்பில் பழைய பாடத்திட்டங்கள்தான்இன்னும் இருக்கின்றனவாம்.
தவிர, தற்போதெல்லாம் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பப் படிப்புக்குத்தான் மவுசு கூடிவிட்டதாகமாணவ-மாணவிகள் கூறுகிறார்கள். மேலும், இந்தப் படிப்பில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட லேட்டஸ்ட்பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்னும் சொல்லப் போனால், கம்ப்யூட்டரையே மெயின் பாடமாகப் படித்து, 4 ஆண்டுகளை வீணடிக்கமாணவ-மாணவிகள் விரும்பவில்லை. வேறு ஒரு பாடத்தை மெயினாக எடுத்துப் படித்து, பிரைவேட்டாகவேகம்ப்யூட்டர் படித்தால் போதும் என்றும் அவர்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளனர்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த பல ஆயிரக்கணக்கான பேரும், கடந்த 4 மாதங்களாக அமெரிக்காவில்விரட்டப் பட்டுக் கொண்டிருப்பதும், இந்த மாணவ-மாணவிகளின் வயிற்றைக் கலக்கியிருக்கக் கூடும். இந்தியாவில்கூட, ஏகப்பட்ட சாப்ட்வேர் கம்பெனிகள் மூடுவிழாவுக்குத் தயாராகி வருவதும் இவர்களுக்குத் தெரியாமல்இருந்திருக்காது.
சனிக்கிழமை தொடங்கிய இன்ஜினியரிங் படிப்பிற்கான கவுன்சிலிங்கின் போது, இந்தக் காட்சியை அப்பட்டமாகப்பார்க்க முடிந்தது. நுழைவுத் தேர்வில் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவர்கள் கூட கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்படிப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை.
எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடத்தைத்தான் அவர்கள் விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து,தமிழகக் கல்வி அமைச்சர் தம்பிதுரையிடமிருந்து அதற்கான அத்தாட்சிக் கடிதத்தைக் கூட பெற்று விட்டனர்.












Click it and Unblock the Notifications