பாமக கூறியது அடிப்படையற்ற குற்றச்சாட்டு: ஜெ. பாய்ச்சல்
சென்னை:
அதிமுகவை விட்டு விலகிச் சென்றதற்கு பாமகவின் தலைவர் ராமதாஸ் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படைஅற்றவை என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பாமக தலைவர் ராமதாஸ் தேவையில்லாத, தவறான குற்றச்சாட்டுக்களை என் மேல் சுமத்தியுள்ளார். பாமகவுடனானகூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான் என்று தேர்தலுக்கு முன்னரே அதிமுக தெளிவாகக் கூறியுள்ளது.
கடந்த தேர்தலில், பாமக கேட்ட 27 தொகுதிகளையும் நாங்கள் கொடுத்தோம். இவற்றில் பெரும்பாலானதொகுதிகள் அதிமுகவே நின்று வெற்றிவாய்ப்பைச் சூடக்கூடிய தொகுதிகள் ஆகும்.
அதுபோல், பாமகவுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியைப் பெற்றுத் தருவதற்கு நாங்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை.
தன்னை அவமானப் படுத்தி அனுப்பிவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார். இது அபாண்டமான குற்றச்சாட்டு.கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை நாங்கள் எப்போதும் அவமரியாதை செய்ததே கிடையாது என்றுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications