விடுதலைப் புலிகளுக்கு தடை கூடாது என்கிறது சட்டம்
கொழும்பு:
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தடை விதித்துள்ளது சட்டவிரோதமானது என்று இலங்கை சட்ட வல்லுநர்கள் இலங்கை அரசை எச்சரித்துள்ளனர்.
கடந்த 1998ம் ஆண்டு எமெர்ஜன்சியின் போது, விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது.இந்தச் சட்டம் கடந்த ஜூலை 4ம் தேதி (வெள்ளிக்கிழமை)யுடன் காலாவதியானது.
இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மீண்டும் எமெர்ஜன்சியை இலங்கை அரசு நீட்டித்துள்ளது. அதன்படி,விடுதலைப் புலிகளுக்கான தடையையும் நீட்டித்து இலங்கை அரசு உத்தரவிட்டது.
கடந்த மாதம் இலங்கை அரசின் முக்கிய கூட்டணிக் கட்சினாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தன்னுடைய ஆதரவைவாபஸ் பெற்றதை அடுத்து, இலங்கை அரசு ஆட்டம் கண்டுள்ளது. இந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காகத்தான்,சந்திரிகா அரசு இந்த எமர்ஜன்சி நாடகத்தைப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதைச் சாக்காக வைத்து, சட்டத்தை மீறி விடுதலைப் புலிகளுக்குத் தடையை நீட்டித்துள்ளது இலங்கைஅரசு என்று கூறுகிறார்கள் இலங்கையின் பெரும் சட்ட வல்லுநர்கள்.
தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான சட்டத்தின் சில விதிகளை அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து, எடுத்துக்கூறுகிறார் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குலதுங்கா.
இலங்கை அரசின் இந்த முடிவு, அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையை மீறும் ஒரு செயலாகவே குலதுங்காகருதுகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications