தமிழக அரசின் விசாரணை கமிஷனுக்கு தி.மு.க. எதிர்ப்பு
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்தார்களா, அப்போது நடந்தது என்னஎன்பது குறித்து விசாரிக்க தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷனை முன்னாள் தமிழக அமைச்சர் கோ.சிமணி எதிர்த்துள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும தி.மு.க. தலைவரை சந்தித்துவிட்டுவந்த பின் முன்னாள் தமிழக அமைச்சர் கோ.சி. மணி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது:
நாங்கள் குற்றம் கூறியவரையே நீதிவிசாரணைக்கு தலைவராக அமைத்திருப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.இது சரியில்லை, உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்தால்தான் விசாரணை சரியாக நடக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சி தவைவர் ராமதாஸ் தி.மு.கவிற்கு வந்தால் ஏற்றுக் கொள்வதா என்பது குறித்து தலைவர்தான்முடிவு செய்ய வேண்டும் என்றார்.
பிரதமர், ஜனாதிபதிக்கு திமுகவினர் கடிதம்
ஒரு நபர் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் திமுகவினர் கடிதம் எழுதி வருகின்றனர்.மிசா. கணேசன், ஆர்.எஸ். பாரதி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மத்தியஅரசுக்கும் ஜனாதிபதிக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். "போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம்செய்வதற்காகவே விசாரணை கமிஷனை அமைத்துள்ளனர். மத்திய அரசு உடனே இதில் தலையிட வேண்டும்"என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications