குஜராத் பூகம்ப உதவி: புறக்கணிக்கப்படும் ஏழைகள்
அகமதாபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தில் உதவிகள் வழங்கப்பட்டதில் ஏழை மக்களும், சிறுபான்மையினரும்பாரபட்சமாக நடத்தப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி, குஜராத் மாநிலத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 25,000 பேர் வரைஉயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்தனர்.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், மீட்புபணியில் ஏழை மக்களையும், சிறுபான்மையினரையும் அரசு பாரபட்சமாக நடத்தியுள்ளதாக அகமதாபாத்தில்இருக்கும் ஆய்வு நிறுவனம் ஒன்றும் டெல்லியில் இருக்கும் ஆய்வு நிறுவனம் ஒன்றும் தெரிவித்துள்ளன.
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூஜ், பாச்சான், ரபார் மற்றும் அஞ்ஜார் பகுதிகளில் உள்ள 30கிராமங்களில், 613 வீடுகளை தேர்ந்தெடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது மக்கள் கூறியதாவது:
பணக்காரர்கள்தான் அதிகமான நிவாரண உதவிகளைப் பெற்றுள்ளனர். எங்களுக்கு கிடைத்த உதவியும்போதுமானதாக இல்லை. எங்களுக்கு கிடைத்த பாதிக்கும் மேற்பட்ட உதவிகள் என்.ஜி.ஓ. என்றழைக்கப்படும்தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்துதான் கிடைத்தன.
அரசு பூஜ் பகுதியில்தான் அதிக கவனம் செலுத்தியது. ஆனால் அங்கு ஏழை மக்களின் எண்ணிக்கை குறைவு. ரபார்,பாச்சான், அஞ்ஜார் பகுதிகளில் இருந்த ஏழை மக்களுக்கும், சிறுபான்மை இனத்தவருக்கும் அரசு எந்த விதமானஉதவியும் செய்யவில்லை என்று அந்த மக்கள் கூறினர்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்கள் மிகவும் குறைவு. அவையும் மிக தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது என40 சதவித மக்கள் தெரிவித்தனர்.
தொண்டு நிறுவனங்கள்தான் சிறுபான்மையினருக்கு நிறைய உதவி செய்தன. அஞ்ஜாரில் பாதிக்கப்பட்டமக்களுக்கு செய்யப்பட்ட உதவியில் 65-80 சதவிகித உதவிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான்செய்துள்ளன. அதே போல் ராபாரிலும் 18 சதவிகித மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான் உதவிஉள்ளன என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ள்ளது.
இது குறித்து சமூக அமைப்பைச் சேர்ந்த ஃபாதர் பிரகாஷ் கூறுகையில், ஒரு சில மதத்தில் பிறந்தவர்கள் என்றகாரணத்திற்காக அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய உதவிகள் மறுக்கப்பட்டால் அது விரோதத்தைதான்வளர்க்கும். அந்த விரோதம் சில சமயம் தீவிரவாதத்திற்கு வழி வகுக்கும. அது போன்ற பல சம்பவங்கள் நம்நாட்டில் நடந்துள்ளன என்றார்.
லோக் அதிகார் மான்ச் (மக்கள் உரிமை கழக தலைவர்) தலைவர் கிரீஷ் படேல் கூறுகையில், இந்த இயற்கை சீற்றம்ஏழை-பணக்கார மக்களிடையே இருக்கும் இடைவெளியை போக்கும் என நினைத்தோம். ஆனால் இதுஇடைவெளியை இன்னும் அதிகப்படுத்தி விட்டது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications