ஆகஸ்டு 16ல் சட்டசபை கூடுகிறது: அனல் பறக்கும்
சென்னை:
தமிழக சட்டசபை ஆகஸ்டு மாதம் 16ம் தேதி கூடும் என்று தமிழக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன்செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து, ரங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அதிமுக ஆட்சி கடந்த மே மாதம் 14ம் தேதி பதவியேற்றதை அடுத்து, முதன் முதலாக தன்னுடையபட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக, ஆகஸ்டு மாதம் 16ம் தேதி கூடுகிறது.
அரசியல் சாசனச் சட்டம் 174/1 பிரிவின்படி, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இக்கூட்டத் தொடரின் போது, அதிமுக ஆட்சியின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
செப்டம்பர் மாத இறுதி வரை இந்தக் கூட்டத் தொடர் நீடிக்கும் என்று அந்த அறிக்கையில் ஆளுநர் ரங்கராஜன்கூறியுள்ளார்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட பின்னர், ராமதாசின் பா.ம.க. அதிமுகவிலிருந்து விலகி பின்னர் நடக்கும் முதல்சட்டசபைக் கூட்டம் இது தான். இதனால், சபையில் விவாதங்களில் அனல் பறக்கும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications