முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதல்: முன் ஜாமீன் கேட்கிறார் மாஜி டி.ஜி.பி
சென்னை:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தமிழக சிறையிலுள்ள முஸ்லீம் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தில்தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஷர்மா முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல்செய்துள்ளார்.
1997ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கோயம்புத்தூருக்கு வந்தபோது, அங்குதொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்தவர்கள்பலரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்
சிறையில் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி,முன்னாள் டி.ஜி.பி. ஷர்மா உள்ளிட்டோர் மீது ப்ரீத்தி பாஸ்கர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், "முஸ்லீம்கைதிகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடந்தபோது, நான் சிறைத்துறைஅதிகாரியாக இல்லை. எனக்கும் முஸ்லிம் கைதிகள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும்கிடையாது. எனவே தனக்கு முன் ஜாமீன் தர வேண்டும்" எனக் கூறி மனுத் தாக்கல் செய்துள்ளார் ஷர்மா.
ஷர்மாவின் வழக்கறிஞர் கூறுகையில், ப்ரீத்தி பாஸ்கர் தொடர்ந்த வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் இருப்பதால்,கீழ் நீதிமன்றம் ப்ரீத்தி பாஸ்கரின் புகாரை ஏற்று விசாரிக்கக் கூடாது. இதனால், ஷர்மாவுக்கு முன் ஜாமீன்வழங்கப்பட வேண்டும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.