மாநகராட்சி கூட்டம்: ஸ்டாலினை ஒதுக்கும் தமிழக அரசு
சென்னை:
சென்னை மாநகராட்சி கூட்டம் புதன்கிழமை கூட்டப் பட்டிருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனசென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் 10வது மேம்பாலத்தை பார்வையிட்ட பின்னர், ஸ்டாலின்செய்தியாளர்களிடம் கூறும்போது:
புதன்கிழமை (ஜூலை 11) சென்னை மாநகராட்சியின் கூட்டம் கூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், சென்னை மேயரான எனக்கு இது பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையில், வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சென்னையில் இருக்கும்வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறித்தும், அந்த வாக்குச் சாவடிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதாஎன்பது குறித்தும் அறிக்கை தருமாறு கூறப்பட்டிருந்தது.
அந்த அரசு ஆணையை திங்கள்கிழமை மாலை என் பார்வைக்கு கொண்டு வந்த மாநகராட்சி கமிஷனர், அதில்கையெழுத்து இடுமாறு கேட்டுக் கொண்டார். நான் அந்த அரசு ஆணையைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்துபோட்டேன்.
இது அவசரமான விஷயம் என்பதால், இது குறித்து விவாதிக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தை இந்த மாதம் 11ம்தேதி கூட்ட உள்ளேன். இந்நிலையில், தமிழக அரசு சார்பாகவும் புதன்கிழமை மாநகராட்சி கூட்டம் கூட்டப்படஇருக்கிறது என்ற செய்தி வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.
அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற உடன் பல உயர் அதிகாரிகளும் இடம் மாற்றப்பட்டிருப்பதால் மாநகராட்சிபணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் ஸ்டாலின்.