காமாட்சியம்மன் ரூபத்தில் ஜெ.: எஸ்.எஸ். சந்திரன்
சென்னை:
என்னுடைய குலதெய்வம் காமாட்சி அம்மன். அந்த அம்மன் ரூபத்தில் ஜெயலலிதாவை நானும் என்னுடையகுடும்பத்தினரும் கண்டு மகிழ்கிறோம் என்றார் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன்.
அதிமுகவின் ராஜ்யசபை எம்.பிக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
உண்மையோடு உழைப்பவர்களுக்கு உயர்வு தருபவர் ஜெயலலிதா, அதற்கு அடையாளம் நான்தான். அவருக்குக்காலம் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அதிமுகவின் சாதாரணத் தொண்டன், நடிகன், பேச்சாளன். அவ்வளவுதான். கட்சியில் எந்தப் பொறுப்பையோபதவியையோ வகிக்காதவன்.
அதிமுகவில் சேர்ந்ததிலிருந்து உண்மையான விசுவாசத்தோடு உழைத்து வருகிறேன். அதற்கான பரிசாக,ஜெயலலிதா இப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத மிகப் பெரிய பதவியை எனக்குக் கொடுத்துள்ளார்.
இதற்கு நான் எந்த வகையில் நன்றி செலுத்தப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
திமுக தொண்டனாக சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றியும், அங்கே எனக்கு ஒரு கவுன்சிலர் பதவி கூடகொடுக்கப்படவில்லை.
ஆனால், நான் அதிமுகவில் சேர்ந்தே இன்னும் 3 வருடம்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே எனக்கு இவ்வளவுபெரிய பதவியைக் கொடுத்து அழகு பார்க்கிறார் ஜெயலலிதா. இவரல்லவோ தலைவி என்று புகழ்ந்தார் எஸ்.எஸ்.சந்திரன்.












Click it and Unblock the Notifications