ஈவ் டீசிங் செய்த 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்சென்னை:
சென்னையில் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட 4 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த பழனியின் மகள் லதா (19).
இவர் தண்ணீர் எடுப்பதற்காகப் பக்கத்து தெருவுக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 4 இளைஞர்கள்,பாட்டுப் பாடி லதாவைக் கேலி செய்தனர்.
வீட்டுக்குத் திரும்பியதும், தன் தாயிடம் இதுகுறித்துப் புகார் கூறினார் லதா. இதையடுத்து, லதாவின் தாயார் அந்தஇளைஞர்களிடம் சென்று விசாரித்துள்ளார். இதனால், 2 தரப்பினருக்கும் இடையே பலத்த தகராறு மூண்டது.
சிறிது நேரம் கழித்து, இளைஞர்கள் கற்களை வீச ஆரம்பித்தனர். இதில் ஒரு கல் லதாவின் நெற்றியில் பட்டு,அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், ஜானகிராமன், லோகு, ரவி ஆகிய இளைஞர்களைப் பல்லாவரம் போலீஸார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications