"புலி"களின் ஆயுதங்களை இலங்கை ராணுவம் கைப்பற்றியது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதக் குவியலை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
காங்கிரிட்டினால் கட்டப்பட்ட, விடுதலைப்புலிகளின் பெரிய ஆயுதக் கிடங்கை யாழ்ப்பாணம் அருகே இலங்கைராணுவம் கண்டுபிடித்தது.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களில், இந்திய ராணுவத்தின் அடையாளக் குறிகள் காணப்படுகின்றன.
மேலும், சில ஆயுதங்கள் இந்திய ராணுவம் உபயோகப்படுத்தக் கூடியவையாகும்.
பீரங்கி வண்டிகளைத் தகர்க்கக் கூடிய, 88 எம்.எம். ராக்கெட் ஏவுகலன்களும் இந்த ஆயுதக் குவியலில்காணப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் கண்டெடுக்கப்பட்ட பெரிய ஆயுதக் குவியலாகும் இது. 1995ம் ஆண்டு "ரவிராசா"நடவடிக்கையின்போது, ஏராளமான ஆயுதங்களை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
இத்தகவல்களை யாழ்ப்பாணம் போலீஸ் அதிகாரி பிரேமரத்னா கூறினார்.












Click it and Unblock the Notifications