அமெரிக்காவில் சின்மயா மிஷனின் அமைதிப் பேரணி
நியூயார்க்:
சின்மயா மிஷன் சார்பில் நடந்த அமைதிப் பேரணியில் பங்கேற்ற நியூஜெர்சியை சேர்ந்த ஃப்ராங்க் பாலோன் உலகமதங்களிலேயே இந்து மதம்தான் அமைதியை அளிக்கும் மதம் என கூறியுள்ளார்.
மிஸ்டர் இந்தியா என்று அழைக்கப்படும் பாலோன், சின்மயா மிஷன் நடத்திய அமைதிப் பேரணிக்கு பின்இந்தியர்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்களிடேயே பேசுகையில், உலகில் உள்ள மதங்களிலேயேஅமைதியை அளிக்கும் மதம் இந்து மதம்தான் என புகழ்ந்து கூறினார்.
இந்த அமைதிப் பேரணியில் குறைந்த பட்சம் 1,000 பேர் கலந்து கொள்வார்கள் என அமைதிப் பேரணியை ஏற்பாடுசெய்தவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 200 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
அமைதிப் பேரணிக்கு நியூஜெர்சி போலீசார் வழங்கிய பாதுகாப்பைப் பாராட்டி அவர்களுக்கு குண்டு துளைக்காதசட்டையை வழங்கியது சின்மயா மிஷன்.
பகவத் கீதா உபன்யாசம் ராரிடன் எக்ஸ்போ மையத்தில் பிற்பகலில் நடைபெற்றது. இதில் 2,000 பேர் கலந்துகொண்டனர். பகவத் கீதா உபன்யாசத்தை சின்மயா மிஷன் தலைவர் ஸ்வாமி தேஜோமயானந்தா நிகழ்த்தினார்.
ஸ்வாமி தேஜோமயானந்தாவுடன் கீதா உபன்யாசர் ஸ்ரீ ரமேஷ்பாய் ஓஷா. ஸ்வாமி சித்தானந்தா முனிஜி ஆகியோர்பங்கேற்றனர். உபன்யாசத்திற்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் லலித் மான்சிங்கும் பங்கேற்றார்.
கோடீஸ்வரர் எஸ்.பி. இந்துஜா இங்கு வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, அவர் பின்சத்யநாராயணா கோவிலுக்கும் சென்று வழிபட்டார். அவர் தனது அமெரிக்க விஜயத்திற்கான காரணத்தை கூறமறுத்துவிட்டார்.
சின்மயா மிஷனின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. ஆண்டுவிழாகெண்டாட்டங்கள் சனிக்கிழமை வரை நடைபெறும்.
ஐ.ஏ.என்.எஸ்.