குழப்பமே உன் பெயர் த.மா.காவா?
சென்னை:
வரும் ஜூலை 23ம் தேதி நடைபெறவிருக்கும் ராஜ்ய சபா எம்.பி. தேர்தலில் தமாகா சார்பாக யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது பற்றி வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் தமாகா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தெரியவரும்.
தமிழகத்தில் உள்ள 6 ராஜ்ய சபா எம்.பிக்களின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய எம்.பிக்களைத்தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவற்றில், அதிமுக கூட்டணிக்கு ஒதுங்கியுள்ள 5 சீட்டுகளில், 4 சீட்டுகள்அதிமுகவுக்கும் ஒரு சீட் தமாகாவுக்கும் ஒதுக்கப்பட்டன. எஞ்சியுள்ள ஒரு திமுக சீட் மூலம் நடிகர் சரத்குமார்போட்டியிடுகிறார்.
கட்சியின் முக்கிய எம்எல்ஏக்கள், மூப்பனாரின் மகன் கோவிந்தவாசனுக்குத்தான் ராஜ்ய சபா சீட்டைக் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, தமாகாவில் ஏற்பட்ட கோஷ்டிப்பூசலுக்குத் தீர்வு கண்ட பெருமை கோவிந்தவாசனையே சேரும் என்பதால், அவருக்குத்தான் இந்த சீட்டைக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால், தன் மகன் தீவிர அரசியலுக்கு வருவதை மூப்பனார் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போதுதமாகா சார்பில் ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் ஜெயந்தி நடராஜனே மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள்இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ஜெயந்தி நடராஜனுக்கு இந்தப் பதவி போய்விடக் கூடாது என்பதற்காகவே கோவிந்தவாசனைஎம்.பியாக்க பல த.மா.கா. பெருந்தலைகளும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், த.மா.காவின் எம்எல்ஏக்கள் கூட்டம் வியாழக்கிழமை அவசரமாகக் கூடுகிறது. ஏனென்றால்வெள்ளிக்கிழமைக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே, ஏதாவது ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமாகா உள்ளது.












Click it and Unblock the Notifications