கிருஷ்ணா நீரைத் திருடும் ஆந்திர விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் செல்லும் கால்வாய் பகுதியில் பாசனம் செய்துவரும் ஆந்திர மாநில விவசாயிகள்தங்களது பாசனத்திற்கு போதுமான நீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திரம் மற்றும் தமிழகத்திற்கிடையே தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்கஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி ஆந்திர மாநிலத்தின் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து சென்னைக்குகிருஷ்ணா நீரை ஆந்திரம் வழங்குகிறது.

தற்போது தமிழகத்தின் கோரிக்கைப்படி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை ஆந்திரம் திறந்துவிட்டுள்ளது. அந்த நீர் தற்போது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் பகுதியை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

புதன்கிழமை மாலை அல்லது இரவுக்குள் தண்ணீர் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் தங்களுக்குத் தேவையான பாசன நீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும் என்று ஆந்திர-தமிழகஎல்லைப் பகுதியில் உள்ள ஆந்திர மாநில விவசாயிகள் அம்மாநல அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணா நீரை சென்னைக்கு வழங்குவதால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நீரை, மோட்டார் வைத்தும், கால்வாய் வெட்டியும்திருட்டுத்தனமாக எடுத்துப் பயன்படுத்துகின்றனர் ஆந்திர விவசாயிகள். இதனால் தமிழக எல்லைக்கு கிருஷ்ணா நீர்வந்து சேரும் போது குறைவான நீரே வரும் என்று கூறப்படுகிறது.

ஆந்திர விவசாயிகளின் செயலை அம்மாநில அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீரின்அளவு போதுமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+