விண்வெளி சுற்றுலாவுக்கு நவீன "அவதார்" விமானம்
டெல்லி:
விண்வெளிக்குச் சுற்றுலா செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன "அவதார்" விமானம், விரைவில்இந்தியாவில் உருவாக உள்ளது.
இந்திய விமான வடிவமைப்பில் புகழ்பெற்ற ராகவன் கோபால்சுவாமி இதற்கான ஐடியாக்களை இந்திய அரசுக்குஅள்ளி வழங்கியுள்ளார்.
"அவதார்" என்ற பெயரில் பலமுறை உபயோகப்படுத்தக் கூடிய விண்வெளி விமானத்தை இந்தியாவடிவமைத்துள்ளது. இதன் மூலம் விண்வெளிப் பயணத்தின் செலவு மிகவும் குறையும். இச்செலவில் சுற்றுலாப்பயணிகளும் விண்வெளிக்குச் செல்ல முடியும்.
"அவதார்" விமானத்தில் திரவ வடிவ காற்றாடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தை சுமார்100 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்த முடியும்.
சாதாரண விமானத்தைப் போல்தான், இந்த விமானமும் தரையிலிருந்து கிளம்பும். 10 கி.மீ. உயரத்துக்குச் சென்றபின்னர், கிரையோஜெனிக் இன்ஜின் உதவியுடன் இவ்விமானம் விண்வெளிக்குச் செல்லும்.
பல்வேறு நாடுகள் இதுபோன்ற விமானத்தைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. இதனுடையபேட்டன்டைப் பதிவு செய்வதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ரஷ்யா உள்பட பல நாடுகள்விண்ணப்பித்துள்ளன என்றார் ராகவன்.
பாரத் டைனமிக் லிமிடெட்டின் முன்னாள் தலைவரான ராகவன், இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.