இந்தியா வந்தார் முஷாரப்: மிகச் சிறப்பான வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சனிக்கிழமை இந்தியா வந்த பாகிஸ்தான் அதிபரும் ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரபுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காலை 6.10 மணி: பாகிஸ்தானில்...

பாகிஸ்தானில் இருந்து காலை 6.10 மணிக்கு சிறப்பு மூலம் அவர் டெல்லி கிளம்பினார். அவருடன் மனைவி பேகம்ஷெபா, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய 19 பேர் குழுவும் இந்தியா வந்துள்ளது.

விமான நிலையத்தில் அவரை அவரது தாயார் மற்றும் அமைச்சர்கள், முப்படைத் தலைவர்கள் வழியனுப்பிவைத்தனர்.


காலை 8.20 மணி: டெல்லியில்...

காலை 8.20 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கியது முஷாரபின் விமானம். விமானநிலையத்தில் அவரை மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் திக்விஜய்சிங், வெளியுறவுத்துறை செயலாளர்கோகிலா ஐயர், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு வரவேற்பு:

அங்கிருந்து நேராக இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் முஷாரப். அங்கு அவரைகுடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் இந்திய முப்படை வீரர்களின் சிறப்பு அணி வகுப்பையும் அவர்கள் அளித்த மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது.

அவர் இன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் தான் தங்குகிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும்முதல் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+