மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: திமுக மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா அரசின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய அரசுக்கு அளித்துவரும் தனது ஆதரவை திமுக மறுபரிசீலனை செய்யும் என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிகூறினார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,

இது பா.ஜ.கவுக்கு நான் விடும் எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆதரவை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என்று தான் கூறுகிறேன். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் திமுகஅமைதியாக இருக்காது.

பாட்டாளி மக்கள் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து வாஜ்பாயுடன் பேசிய பிறகேமுடிவு செய்ய முடியும். பா.ம.கவை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும்இல்லை.

ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் உட்பட மற்ற கூட்டணித்தலைவர்களையும் கலந்து பேசிய பிறகே அதுபற்றி முடிவு எடுக்கப்படும்.

பிரதமர் வாஜ்பாய் தற்போது ஆக்ரா பேச்சுவார்த்தையில் பிஸியாக இருப்பதால் அவருடன் பேச முடியாது.அவருடன் பேசிய பின் அது பற்றி அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.

யு.என்.ஐ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+