பாதுகாப்புக்காக ஹெலிகாப்டரில் சென்ற முஷாரப்
ஆக்ரா:
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை அடுத்து ஆக்ரா முழுக்க மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டேக்கள், உ.பி, ராஜஸ்தான் போலீசார் ஆகியோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் ரோந்து சுற்றிய வண்ணம் உள்ளனர்.
முஷாரபின் பாதுகாப்பைக் கருதி அவரை விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு விமானப் படைஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை ஆக்ராவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் காலையில் வந்திறங்கியது முஷாரபின்சிறப்பு போயிங் விமானம். அங்கிருந்து முஷாரபையும் அவரது மனைவியுைம் முதலில் காரில் தான் அமர் விலாஸ்ஐந்து நட்சத்திர ஹோட்டலுகக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டப்பட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் இருவரும் ஹோட்டலுக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த ஹெலிகாப்டர் பிரதமர் வாஜ்பாய் தங்கியுள்ள ஜே.பி பாலஸ் ஹோட்டல் அருகே அமைக்கப்பட்டுள்ளஹெலிகாப்டர் தளத்தில் தரையிரங்கியது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் முஷாரப் அமர் விலாஸ் ஹோட்டலுக்குச்சென்றார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த முஷாரப் பின்னர் தனது அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுவாஜ்பாய் தங்கியுள்ள ஜே.பி. பாலஸ் ஹோட்டலுக்கு வந்தார்.
இங்கு தான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கார் மூலம் விமானப் படைத் தளத்திலிருந்து ஹோட்டலுக்கு பர்வேஸ் செல்வார் என எதிர் பார்த்துஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளின் இருபுறமும் கூடியிருந்தனர். ஆனால், அவர் ஹெலிகாப்டர் மூலம்சென்றதையடுத்து அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications