மாறன், பாலுவை பதவி நீக்கம் செய்ய ஜெ. கோரிக்கை
சென்னை:
போலீசாரைத் தாக்கிய மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனையும் டி.ஆர். பாலுவையும் மத்திய அரசுஅமைச்சரவையிலிருந்து நீக்கம் வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
நேற்று (சனிக்கிழமையன்று) நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு நிருபர்களுக்குப்ஜெயலலிதா அளித்த பேட்டியில்,
மத்திய அரசுடன் சுமூக உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் 2 பேர் மீதும் போடப்பட்டவழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அதனால், அவர்கள் தவறு செய்யவில்லை என்று அர்த்தமில்லை.
மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை, சட்டத்திலும் அதற்கு இடம் இல்லை.
மேலும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த உண்மை சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவே தமிழகம்முழுவதும் கேபிள் டிவிக்களில் அந்த கேசட் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முன்னதாக அதிமுக செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.