மனைவியுடன் தாஜ்மகால் சென்றார் முஷாரப்
ஆக்ரா:
தனது மனைவி பேகம் ஷெபாவுடன் தாஜ்மகாலைக் காணச் சென்றார் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்.
இப்போது தான் முதன்முதலாக தாஜ்மகாலைக் காண்கிறார் முஷாரப்.
தாஜ்மகாலைச் சுற்றியுள்ள பகுதி சுற்றுச்சூழல்ரீதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால்முஷாரப் மற்றும் அவரது குழுவினர் பெட்ரோல்-டீசல் உபயோகிக்காத எலெக்ட்ரிக் வேன்களில் தான்தாஜ்மகாலுக்கு சென்றனர்.
தனது ஹோட்டல் அறையிலிருந்து காலையில் தாஜ்மகாலைப் பார்த்த முஷாரப், இது போன்ற ஒரு நினைவுச்சின்னத்தை என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை என பிரதமர் வாஜ்பாயிடம் முஷாரப் கூறியிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
தாஜ்மகாலில் நுழைந்த அதிபரும் அவரது மனைவியும் அதன் ஒவ்வொரு பகுதி குறித்தும் விளக்கம் கேட்டுக்கொண்டே வந்தார்.
கிரீம் கலர் சட்டையும் கருப்பு பேண்ட்ஸ்சும் அணிந்து மேல் பட்டனை திறந்துவிட்டபடி மிக உற்சாகமாக வந்தார்முஷாரப். தனது மனைவியுடன் தாஜ்மகால் எதிரே அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டபோது இருவர்முகத்திலும் வெட்கம் பீரிட்டதைக் காண முடிந்தது.
தாஜ்மகாலுக்குள் நுழையும் முன் பிற பார்வையாளர்களைப் போலவே முஷாரபும் அவரது மனைவியும்காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு நடந்து சென்றனர்.
முஷாரபின் வருகையை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை தாஜ்மகாலைக் காண பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை.