பலிக்குமா சந்திரிகாவின் புதிய திட்டம்?
கொழும்பு:
பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு, புது சட்ட திருத்த மசோதாவை உருவாக்க மக்களிடம் வாக்கெடுப்புநடத்தவிருக்கும் இலங்கை அதிபர் சந்திரிகாவின் திட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சமீப காலமாக இலங்கையில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களால், அங்கு குழப்பநிலை நிலவி வருகிறது.
தற்போதுள்ள சட்டப்படி, மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, தேர்தல்ஆணையாளர் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகியோர் மீது தர்மதாச என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
முன்னதாக வரும் 21ந்தேதி சனிக்கிழமையன்று வாக்கெடுப்ப நடக்கும் என்று அரசு அறிவித்திருந்தது.
தீவிர சிங்களர் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிப் பிரமுகர் கூறும்போது, சட்டத்திருத்தம் போன்றகாரணங்களுக்கு மக்களிடம் ஆதரவு கோர முடியாது. இதுபற்றி வெளிநாட்டுச் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்துவருவதாகவும், விரைவில் சர்வதேச கோர்ட்டில் வழக்குத் தொடரப்போவதாகவும் கூறினார்.
முன்னதாக, 115 எதிர்கட்சி எம்பிக்கள் சார்பாக சபாநாயகருக்கு அளிக்கப்பட்ட மனுவில், 16ம் தேதிநம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சபாநாயகர் மனுவில் கூறப்பட்டுள்ளவற்றை பரிசீலித்து வரும் 16ம் தேதி திங்கள் கிழமை தமது முடிவை அறிப்பார்என்று எதிர்பார்க்கப்படுகிறது
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications