கடத்தல்காரர்களிடமிருந்து 440 நட்சத்திர ஆமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை
சிங்கப்பூருக்கு கடத்தப்பட விருந்த 440 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை விமானநிலையத்தில் மீட்டனர்.
கடந்த 14ம்தேதி அப்துல் லத்தீப் என்பவர் ஒரு பெரிய பார்சலுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அந்த பார்சலை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிடட போது ரூ6 லட்சம் மதிப்புள்ள 440நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரிய வந்தது.
உடனே அதிகாரிகள் ஆமைகளை பறிமுதல் செய்து, அந்த நபரைக் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் உணவுக்கு இந்த வகை ஆமைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
மீட்க்கப்பட்ட ஆமைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications