For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்கெட் : இந்திய அணி இன்று இலங்கை செல்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்தியஅணி இன்று (திங்கள் கிழமை) மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது.

இந்த 3 நாடுகள் மோதும் ஒரு நாள் ஆட்டம் வருகிற 18ம்தேதி தொடங்கி ஆகஸ்டு 5ம்தேதி முடிகிறது. பகல் இரவுஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கும், பகல் ஆட்டம் காலை 9.30 மணிக்கும் தொடங்க விருக்கிறது.

பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும் இலங்கையும் ஆடவிருக்கின்றன.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கர் காலில் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருவதால் ,அணியில் இடம் பெறவில்லை.

அவருக்குப் பதிலாக அமய் குரேஷியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேப்டன் கங்குலி கூறுகையில்,

வீரர்களுக்கு திடீரென்று காயம் ஏற்படுவது இயற்கைதான். டெண்டுல்கர் இல்லாமல் ஆடுவதற்கு இந்திய அணிகற்றுக் கொள்ளும். இருப்பினும், டெண்டுல்கர் இருந்தால் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்என்றார்.

ஜிம்பாப்வேயில் பெற்ற தோல்விகளை மறந்து புத்துணர்ச்சியுடன் நாங்கள் களமிறங்க உள்ளோம் என்று கூறினார்.

மேலும், சில இந்திய வீரர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக வந்த குற்றச் சாட்டையும் கங்குலிமறுத்தார். ஏற்கனவே,இதுதொடர்பாக வந்த குற்றச் சாட்டுக்கு இந்திய அணியின் மேனேஜர் சேட்டன் சவுகான்மறுப்புத் தெரிவித்திருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X