For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்திரிகையாளர்களுடன் நட்புக் கொள்ளவே விருப்பம்: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பத்திரிகையாளர்களுடன் நட்புடன் இருப்பதையே நான் விரும்புகிறேன் என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

சுமார் 2 வார இடைவெளிக்குப் பிறகு, அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் சனிக்கிழமைநிருபர்களைச் சந்தித்தார் அவர். வந்திருந்த நிருபர்கள் அனைவருக்கும் ஸ்வீட், காரம், காபி, டீ என்று கொடுத்துஅசத்தினார் ஜெயலலிதா.

செயற்குழு முழுவதையும் படமெடுப்பதற்கு புகைப்பட நிருபர்களும், டி.வி. காமராமேன்களும்அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் துறைவாரியான நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தபோது, உங்களையெல்லாம்அடிக்கடி சந்தித்து வந்தேன்.

ஆனால், இடையில் நம்மிடையே ஏனோ தகராறு ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் மீண்டும் உங்களை இப்போதுசந்திக்கிறேன்.

இனி அடிக்கடி உங்களைச் சந்திப்பேன். உங்களுடன் நட்புடன் பழகவே நான் விரும்புகிறேன் என்றார்ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X