அதிமுக-காங்கிரஸ் மோதல் ஆரம்பம்
சென்னை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இளங்கோவனை நீக்கும் வரை காங்கிரசுடன் அதிமுக உறவு வைக்கவேண்டாம் என்று அதிமுக தலைமைக் கழக செயலாளர் செங்கோட்டையன் முதல்வர் ஜெயலலிதாவுக்குகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், திராவிடக் கட்சிகள் இனிமேல் ஆட்சியில் இருக்கக் கூடாது,அதிமுக ஆட்சியில் இருப்பது தவறு என்றரீதியில் மதுரையில் நடந்த ஐ.என்.டி.யு.சி மாநாட்டில் இளங்கோவன்பேசியுள்ளார்.
எனவே அவரைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அக்கட்சி மேலிடம் நீக்க வேண்டும்.
அதுவரை காங்கிரசுடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவைக் கேட்டுக்கொள்கிறேன். இளங்கோவன் பதவி நீக்கம் செய்யப்படும் வரை அதிமுக தொண்டன் ஓயமாட்டான் என்றும் அவர்கூறியுள்ளார்.
ஏற்கனவே பா.ம.க. கூட்டணியிலிருந்து பிரிந்து விட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில்பேசிய இளங்கோவன், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து விலகவும் கூட தயங்க மாட்டோம் என்று மிரட்டியிருந்தார்.
அதற்கடுத்து இப்போது மதுரையிலும் அதிமுகவைத் தாக்கி பேசியுள்ளதையடுத்து, அதிமுக சார்பில் இந்தளவுக்குகாட்டமாக அறிக்கை விடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் செங்கோட்டையனால் இது போன்றஅறிக்கை எல்லாம் விட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே!
இது 2 கட்சிகளுக்கும் இடையே மேலும் பிளவை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள்கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications