முதலிரவு அறையில் கைதான திருட்டு மணமகன்

Subscribe to Oneindia Tamil

திருவெற்றியூர்:

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் முதலிரவின்போது கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த திருவெற்றியூரில் ஒரு மருந்துக் கடையில் சமீபத்தில் இரவில் பூட்டை உடைத்துக் கொள்ளைஅடிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். கொள்ளை நடந்த இடத்தில் பதிவான கைரேகை வெங்கடேசன் (வயது30) என்ற பழைய குற்றவாளியின் கைரேகையோடு ஒத்துப் போனது. இவர் மீது 20க்கும் மேற்பட்ட போலீஸ்ஸ்டேசன்களில் வழக்குகள் உள்ளன.

இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால், வெங்கடேசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்தார். போலீசாரின் கையில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டி வந்தார்.

இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந் நிலையில் வெங்கடேனுக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் மகளுக்கும் திருமணம்நடக்க இருப்பதாக போலீசாருக்கு ஒரு கொரியர் தபால் வந்தது. ஆனால், அந்தக் கொரியர் திருமண நாளன்றுஇரவு தான் போலீஸ் கைக்கு வந்தது.

உடனடியாக போலீசார் திருவண்ணாமலை போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் நள்ளிரவு1.15 மணிக்கு திருமண வீட்டுக்கு விரைந்தனர். அங்கு வீட்டாரிடம் போலீசார் விசாரித்தபோது மணமகனும்மணமகளும் முதலிரவு அறைக்குள் இருப்பதாகக் கூறினர்.

இதையடுத்து முதலிரவு அறையின் கதவைத் தட்டிய போலீசார் வெளியே வந்த வெங்கடேசனைக் கைது செய்தனர்.

போலீசார் விசாரித்தபோது, தன்னை ஒரு பைனான்சியர் என்று கூறி கவுன்சிலரை ஏமாற்றி அவரது பெண்ணைவெங்கடேசன் திருமணம் செய்ததும் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+