உள்ளாட்சித் தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
திருச்சி:
வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்படும் என்று மத்தியவிளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து, திருச்சியில் செவ்வாய்க்கிழமை திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது:
கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் மின் வாக்குப்பதிவுஎந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
அது போலவே, தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் மின் வாக்குப்பதிவுஎந்திரங்களே பயன்படுத்தப்படும்.
இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக முன்னணியில் இணையுமா என்பது பற்றி பாஜகவின் தலைமைவிரைவில் ஒரு முடிவெடுக்கும்.
கருணாநிதி கைது சம்பவம் பற்றி மத்திய அரசின் நடவடிக்கை மந்தமாக உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.இதுபற்றி மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications