திருச்சி அருகே 2 தலை, 4 கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரில் 2 தலை, 4 கை மற்றும் 4 கால்களுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த5 நிமிடங்களிலேயே அக்குழந்தை இறந்து விட்டது.
பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி ஜோதீஸ்வரி (21).இத்தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜோதீஸ்வரி மீண்டும் கர்ப்பமானார். பிரசவத்திற்காக, துறையூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
திங்கள்கிழமை காலை அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தைக்கு 2 தலைகளும், 4கைகளும், 4 கால்களும், 2 பிறப்பு உறுப்புகளும் இருந்தன. அக்குழந்தையின் எடை ஒன்றரை கிலோவாக இருந்தது.
மேலும், பிறந்த 5 நிமிடங்களிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது.
துறையூர் அரசு மருத்துவமனையில், இதுபோன்ற ஒரு குழந்தை பிறந்தது இதுவே முதல் முறை என்று அங்குள்ளமருத்துவர்கள் கூறினர்.
ஏராளமான பொதுமக்கள் இந்த அதிசயக் குழந்தையை வந்து பார்த்தனர்.












Click it and Unblock the Notifications