For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரமேஷ்- சில விவரங்கள்

By Staff
Google Oneindia Tamil News

திங்கள்கிழமை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சென்னை மாநகராட்சி காண்ட்ராக்டரும் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் ஒரு தொழிலதிபர். அவர் ராகா இம்பக்ஸ் (பி) லிமிடெட் என்றநிறுவனத்தை நடத்தி வந்தார்.

இது தவிர தற்போது ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமான காண்டிராக்டர் தொழிலும் ரியல் எஸ்டேட் தொழிலும்செய்து வந்தார்.

இவருக்கு சொந்த ஊர் நாக பட்டிணம் அருகேயுள்ள பாலக்குறிச்சி.

மறைந்த திருச்சி எம்.எல்.ஏ அன்பில் பொய்யா மொழிக்கு அடுத்து மேயர் ஸ்டாலினுடன் இவர்தான் மிகநெருக்கமானவராக இருந்துள்ளார்.

இவருக்கு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அமைச்சர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. திமுக ஆட்சிக்குவந்த பிறகு , அவர்களுடைய நட்பு உடைந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபின், ஸ்டாலினை மாட்ட வைக்க இவரை மடக்கியதாகக்கூறப்படுகிறது.

சாலை போடும் காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவர் ரமேசுக்கு கமிஷன் கொடுத்ததாகவும், பணத்தைத்திருப்பிக் கேட்டபோது தன்னை ரமேசும் திமுக எம்.பி. பரசுராமனும் தன்னைக் கடத்திச் சென்று மிரட்டியதாகவும்ஒரு புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை அடுத்து முன்னாள் எம்.பி., பரசுராமன் கைது செய்யப்பட்டார். ரமேஷ் தலைமறைவாயிருந்தார்.மேலும் ஸ்டாலினுக்கு கமிஷன் பெற்றுத்தந்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கைதானபோது மைசூரில் பதுங்கியிருந்துவிட்டு அவர் விடுதலையான பின்னர் தான் சென்னை வந்தார்.இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்ததாகவும், ஸ்டாலினுக்கு எதிராக அப்ரூவர் ஆகுமாறுகூறி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X