மக்களை ஏமாற்ற பார்க்கிறார் கருணாநிதி: ஜெ. விமர்சனம்
சென்னை:
வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி போகும் வழியில் தன்னைக் கொலை செய்ய போலீசார்திட்டமிட்டிருந்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளதை முதல்வர் ஜெயலலிதா மறுத்துள்ளார்.
கருணாநிதியின் பேச்சை சிறுபிள்ளைத்தனமானது எனவும் விமர்சித்து உள்ளார்.
தான் கைது செய்யப்பட்ட போது போலீசார் தன்னை வேலூர் சிறையில் அடைக்க திட்டமிட்டு இருந்தனர். அவ்வாறுவேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்படும் போது தன்னை கொலை செய்யவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர் எனதி.மு.க.தலைவர் கருணாநிதி சில நாட்களுக்கு முன் நிருபர்களிடம் கூறியிருந்தார்.
இதை ஜெயலலிதா மறுத்துள்ளார். சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
கருணாநிதி சொல்வதில் உண்மை கிடையாது. இது சிறுபிள்ளைத்தனமானது. கருணாநிதி மக்களை திசை திருப்பபார்க்கிறார். இதை கேட்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அதில்உண்மைகள் கண்டு பிடிக்கப்படும்.
விசாரணை கமிஷன் பரிந்துரையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரை விசாரிக்கவிசாரணை கமிஷன் அமைக்கப்படுவது வழக்கமானதுதான்.
1968ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோதும், 1971ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோதும்,1979ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போதும் போலீசாரை விசாரிக்க விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டது.
அதே போல் இப்போதும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது என்றார் ஜெயலலிதா.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications