ஓடும் ரயிலில் "குவா, குவா"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
விழுப்புரம் ஸ்டேஷனை ரயில் நெருங்கிக் கொண்டிருந்த போது நாகவல்லிக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.
விழுப்புரம் ஸ்டேஷனை ரயில் அடைந்தவுடன், நாகவல்லிக்கு மருத்துவ உதவி தேவை என்று ரயில்வேஅதிகாரிகளிடம் சக பயணிகள் கூறினர்.
இதையடுத்து, உடனடியாக ரயில்வே மருத்துவர் அழைக்கப்பட்டார். ரயிலிலேயே நாகவல்லிக்கு அழகான,ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகும் நாகவல்லி மருத்துவமனையில் சேர விரும்பாமல், பிறந்த பச்சிளம் குழந்தையுடன் தனதுபயணத்தைத் தொடர விரும்பி, அவ்வாறே செய்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications