பரிதி வழக்கில் போலீஸ் கமிஷனர் நீதிமன்றத்தில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி தொடர்ந்த வழக்கில் சென்னைபோலீஸ் கமிஷனர் முத்துக் கருப்பன் இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 10.05.2001 அன்று நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுகவேட்பாளர் பரிதிஇளம்வழுதிக்கும், தமிழக முன்னேற்றக் கழகம் சார்பில் சார்பில் போட்டியிட்ட ஜான்பாண்டியனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் தாம் தாக்கப்பட்டதாக பரிதிஇளம்வழுதி புகார் செய்தார். இதை அடுத்து போலீசார் ஜான்பாண்டியனைக்கைது செய்து சிறையில் அடைத்ததனர்.

ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர். அப்போது திமுக ஆட்சி நடந்தது.

அதன் பிறகு வந்த தேர்தல் முடிவுகள் அதிமுக அணிக்குச் சாதகமாக வந்தது.

இதையடுத்து அதே போலீசார் பரிதிஇளம்வழுதி தான் கலவரத்திற்கு காரணமாக இருந்தார் என்று வழக்குப் பதிவுசெய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததனர்.

இதையடுத்து பரிதிஇளம்வழுதி தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் மீதும் துணைக் கமிஷனர் ராஜேந்திரக்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதி மன்ற நீதிபதிகள் அவர்கள் 2 பேரையும் இன்று (புதன்கிழமை) கோர்டில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இன்று முத்துக்கருப்பனும் ராஜேந்திரக்குமாரும் கோர்டில் ஆஜராயினர். ஆனால், விளக்கம் அளிக்க காலஅவகாசம் வேண்டும் என்று கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் (ஆகஸ்டு)1ம் தேதிக்குள்விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+