மீட்கப்பட்டனர் 84 தமிழக மீனவர்கள்
சென்னை:
புதன்கிழமை ஆந்திர மீனவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 84 தமிழக மீனவர்கள், ரூ.1 லட்சத்து 44 ஆயிரம்கட்டிய பிறகு வியாழக்கிழமை மீட்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலப் பகுதியில் உள்ள ராமதீர்த்தத்தில் இந்தக் கடத்தலை அவர்கள் நடத்தினார்கள்.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த இந்த 84 மீனவர்களையும் தேடி, மற்றொரு மீனவர்கள் குழு சென்றது.
கடத்தப்பட்ட 84 மீனவர்களையும் அவர்கள் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்து விட்டனர். ஆனால், இதற்காகஅவர்கள் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் தொகையை ஆந்திர வன்முறைக் கும்பலுக்குக் கொடுக்க வேண்டி இருந்தது.
கடந்த சில நாட்களாகவே இந்த வன்முறைக் கும்பல், தமிழக மீனவர்களைக் கடத்திச் சென்று, லட்சக்கணக்கில்பணத்தைக் கொடுத்தால்தான் அவர்களை விடுவிக்கிறது.
கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று வரும் இந்த வன்முறைக் கும்பல், கைகளில்கிடைத்தவற்றைக் கொண்டு தமிழக மீனவர்கள் மேல் எறிந்து, பிறகு அவர்களைச் சிறைப்பிடித்து விடுகிறது என்றுமீட்கப்பட்ட மீனவர்களில் ஒருவர் கூறினார்.
தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள்கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications