பலத்த பாதுகாப்புடன் அமர்நாத்தில் குவியும் பக்தர்கள்
டெல்லி:
பலத்த பாதுக்காப்புக்கு இடையே தினமும் 3,500 பக்தர்கள் ஜம்முவிருந்து அமர்நாத் யாத்திரையை மேற்கொள்வதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத்யாத்திரையை மேற் கொள்வது வழக்கம்.
சிறிய மலைப்பாதையில் கடும் சிரமத்துடன் பக்தர்கள் ஏறி அமர்நாத் குகையை அடைந்து சிவபெருமானைதரிசிப்பது வழக்கம்.
தீவிரவாதிக தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அமர்நாத் யாத்திரை பாதையில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
யாத்ரிகர்கள் தங்குவதற்காக 14 தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் 24மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கென சாகுவா, புனித குகையாக கருதப்படும் படாலால், பஞ்சாத்ரினி, ஷேஷாங், போஷ்பாத்ரி, ஜோசிபால்,பிசுடாப், பாலகம், சண்டாம்வாரியில் அமைக்கப்பட்டுள்ள யாத்திரிகர்களுக்கான முகாமைச் சுற்றிலும் காவல்பலப்படுத்தப்பட்டுள்ளது
இது குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(சி.ஆர்.பி.எப்.) செய்தித் தொடர்பாளர் டி.ஜி. மல்ஹோத்ராகூறும்போது:
தினமும் 3,500 யாத்ரிகர்கள் ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரையை மேற் கொள்கின்றனர். அமர்நாத்யாத்திரை பாதை முழுவதும் பலத்த காவல் போடப்பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எப்பின் 10 கம்பெனிகள் ஜம்மு பகுதியிலும், 26 கம்பெனிகள் காஷ்மீர் பகுதியிலும் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. பானிகாலிலிருந்து பாலகம் செல்லவும், அங்கிருந்து திரும்பி வரும் பக்தர்களைபாதுகாப்பாக அனுப்பி திரும்ப அழைத்து வர 3 கம்பெனி சி.ஆர்.பி.எப்பும், 2 வீரர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுஉள்ளன.
இது தவிர, சி.ஆர்.பி.எப்பின் மோப்ப நாய்களும் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பல இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மல்ஹோத்ரா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications