அச்சிரப்பாக்கம் அருகே மீண்டும் ரயில் கொள்ளை
சென்னை:
மகனின் பொறியியல் கவுன்சிலிங்கிற்காக சென்னைக்கு ரயிலில் வந்த பெண்ணின் 5 பவுன் தங்க சங்கிலிபறிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை அதிகாலை ரயில் தொழுப்பேடு-அச்சிரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்துகொண்டிருந்தபோது, ரேணுகா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்த ஒருவர், பின்னர் ரயிலின் சங்கிலியைஇழுத்து ரயிலை நிறுத்தி தப்பி ஓடிவிட்டார்.
ஏழை மாணவிக்கு முதல்வர் உதவி:
சென்னையைச் சேர்ந்த மாணவி பி.இ. படிப்புக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.95,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் இருப்பவர் ஞானப்பிரியா. இவர் ஏழ்மை காரணமாக பி.இ. படிப்பு படிக்க முடியாமல் கஷ்டப்பட்டுவந்தார். தன் படிப்பிற்கு உதவுமாறு அவர் முதல்வருக்கு மனு போட்டிருந்தார்.
மனுவை பார்த்த முதல்வர் ஜெயலலிதா அவரது பி.இ. படிப்பிற்காக ரூ 95,000 வழங்குமாறு உத்தரவிட்டார்.
வெள்ளிக்கிழமை கோட்டைக்கு வந்த ஞானப்பிரியாவுக்கு ரூ.35,000 பணத்தை முதல் கட்டமாக வழங்கினார்.












Click it and Unblock the Notifications