தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி 50,000 மீனவர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை சிறையில் வைக்கப்பட்டிருக்கும் 44 தமிழக மீனவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை வேண்டும் எனகோரி ராமேஸ்வரத்தில் 50,000 மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் படகுகளையும் பறிமுதல்செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 66 பேரில், 22 பேரை மட்டும் இலங்கை அரசு சில தினங்களுக்கு முன்புவிடுதலை செய்துள்ளது.

மீதமுள்ள 44 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றினர்.

இறால் மீன்களின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி, அவற்றிற்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்ய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஒரு நிரந்தர விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்என்று மற்றொருதீர்மானம் நிறைவேற்றினர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+