மும்பை குண்டு வெடிப்பு: வழக்கு விசாரணை முடிந்தது
மும்பை:
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு சம்பந்தமாக நடந்து வந்த விசாரணை, 6 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமைமுடிவடைந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை மாநகரின் ஜன நெருக்கடி மிகுந்தபல்வேறு பகுதிகளில் குண்டுகள் வெடிக்கப்பட்டன. இவையனைத்தும் சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் குண்டுகள்ஆகும்.
இதில் உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை 260 பேர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். சேத மதிப்போரூ.37 கோடியையும் தாண்டியது.
இந்த 2 சம்பவங்களும் அப்போது நாட்டையே உலுக்கின.
தாவூத் இப்ராஹிம் மற்றும் டைகர் மேமன் ஆகிய மும்பை தாதாக்கள் இந்த குண்டுவெடிப்பின் காரணகர்த்தாக்களாக இருந்தனர். ஆனால் இவர்கள் போலீஸ் கையில் மாட்டாமல் துபாய்க்குச் சென்று தஞ்சம்புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வழக்கில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின்மீதான விசாரணை 1995ம் ஆண்டு தொடங்கியது. சுமார் 700 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
சுமார் 13 ஆயிரம் பக்க அளவில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications