For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

25 இந்தியக் கைதிகளை விடுவிக்க முஷாரப் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

ஆக்ரா பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியப் போர்க் கைதிகளை விடுவிக்குமாறுவாஜ்பாய் கோரியதற்குச் செவிசாய்த்து 25 பேரை விடுதலை செய்யுமாறு முஷாரப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 15, 16ம் தேதிகளில் ஆக்ராவில் இந்திய-பாக். பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, பாகிஸ்தான்சிறையில் வாடும் இந்தியப் போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டது.இதுகுறித்து ஆவண செய்வதாக அந்நாட்டு அதிபர் முஷாரப்பும் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அந்நாட்டு உள்த்துறைச் செயலாளர் ஒரு பத்திரிக்கைக்குபேட்டியளிக்கையில், "பாகிஸ்தானில் உள்ள வெவ்வேறு சிறைகளில் 171 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் யாரும்போர்க் கைதிகள் அல்ல. ஆனால், இந்திய அரசோ, கைதிகளின் உறவினரோ தகவல் தந்தால், அவர்களை மீண்டும்தேடித் தரத் தயாராக உள்ளோம்" என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்போது முஷாரபின் உத்தரவின் படி, ஒரு வருடத்திற்கும் குறைவாக தண்டனை பாக்கியுள்ள 25கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

இக்கைதிகளை வேகமாக விடுவிக்கும் பொருட்டு, அக்கைதிகள் சம்பந்தப்பட்ட பைல்களை தன்னுடைய மேஜைக்குஉடனே கொண்டு வந்து வைக்குமாறும் முஷாரப் கூறியுள்ளார்.

இருப்பினும் எஞ்சிய 146 கைதிகளின் விடுதலை குறித்து இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்று தெரிகிறது.இவர்களின் விடுதலை குறித்து 2 நாட்டு அதிகாரிகளும் பேசி முடிவு செய்யப்படுமாம்.

முஷாரப் இந்தியா வந்த போது, இந்தியச் சிறைகளிலுள்ள 215 பாகிஸ்தான் போர்க் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று வாஜ்பாய் அறிவித்திருந்தார். அதன்படி 54 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X