குளித்தலை அருகே 3 பேர் படுகொலை
குளித்தலை:
குளித்தலை அருகே பழிக்கு பழி வாங்கும் விதமாக 13 பேர் கொண்ட ஒரு கும்பல் 3 பேரை அரிவாளால் வெட்டிகொடூரமாக கொலை செய்தது.
கரூர் மாவட்டம் குளித்தலைக்கு அருகே உள்ள சூரியனூரைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 30). அதே ஊரைச்சேர்ந்தவர்கள் கிட்டான் (வயது 31), கருப்பண்ணன் (19).
இவர்கள் இருவர் வீடும் பக்கத்தில் உள்ளன. கருப்பண்ணன் சாராய வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்தார். சமீபத்தில்தான் அவர் விடுதலையாகி வந்தார்.
சம்பவம் நடந்த நாளன்று இரவு 13 பேர் கொண்ட கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் சிதம்பரம், கிட்டான்,கருப்பண்ணன் வீடுகளுக்குச் சென்று அவர்களை எழுப்பி வெளியே வரச் செய்தது. வெளியே வந்த அவர்களைஇந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது.
இந்த கொலையை சூரியனூரைச் சேர்ந்த சக்திவேல், கந்தன், பழனிச்சாமி, நாகராஜ், குட்டாரி, அன்பு, வைரமணி,அருணாசலம், ராஜேந்திரன், பனையடியான், ரங்கராஜ், சுப்பிரமணி, மேகநாதன் ஆகிய 13 பேரும்செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது.
இந்த கொலை சம்பவம் பழி வாங்கும் சம்பவம் என்றும் தெரிய வந்துள்ளது.
சூரியூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் சென்ற மாதம் அமாவாசையன்று ஜீயபுரம் சென்றிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டது. அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவம் நடந்திருக்க்கூடும் என்று கூறப்படுகிறது.
சூரியனூரில் கடந்த சில மாதங்களாக இரு கோஷ்டியினருக்கு ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் கொலைசெய்து கொண்டு வருகின்றனர்.
இப்போது கொலை செய்யப்பட்டுள்ள கருப்பண்ணனின் அக்காள் மகள் மல்லிகாவும், அவரது கணவர் ரத்தினமும் 9மாதங்களுக்கு முன்பு உரம் வாங்குவதற்காக வெளியூர் சென்றனர். அவர்கள் இன்றுவரை திரும்பவில்லை.அவர்களும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்குஅனுப்பப்பட்டு உள்ளது.
கொலை செய்தவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அங்கு அதிகஅளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.