தோன்றியது "வீர வன்னியர் பேரவை"
சென்னை:
"வீர வன்னியர் பேரவை" என்ற பெயரில் தமிழகத்தில் புதிதாக வன்னியர் அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுஉள்ளது. தமிழகத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய வன்னியர்களுக்கு உதவ தனியார் வங்கி ஒன்றை துவக்கவும்இந்தப் பேரவை திட்டமிட்டு உள்ளது.
இந்த அமைப்பு ரூ.100 கோடி முதலீட்டில் தனியார் வங்கியைத் துவக்க திட்டமிட்டு உள்ளது. இது தமிழகத்தில்இருக்கும் மிகவும் பின் தங்கிய வன்னியர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்களில் 60 சதவிகிதம் பேர் படிப்பறிவற்றவர்கள்.
இந்த பேரவை அமைக்கப்பட்டதன் நோக்கம் வன்னிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பின்தங்கியவன்னியர்களின் குழந்தைகளுக்கு குறைந்த செலவில் கல்வி கற்பிப்பதும், அவர்களை சமூகத்தில் உயரவைப்பதும்தான்.
எக்காரணம் கொண்டும் இந்தப் பேரவை அரசியல் கட்சியாக மாறாது. ஏனென்றால் வன்னிய இயக்கமாக டாக்டர்ராமதாசால் துவங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, பின்னர் அரசியல் கட்சியாக மாறியது.
இந்தக் கட்சியில் இருக்கும் 10,000 வன்னியர்கள் 1987ம் ஆண்டு சாலை மறியலிலும், பல வன்முறைச்சம்பவங்களிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இன்னமும் நீதிமன்றத்தில் வழங்குகளை சந்தித்து வருகிறார்கள்.எனவே வீர வன்னியர் பேரவை அரசியல் கட்சியாக மாறாது என்றார் ஜகத்ரட்சகன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications