இறந்த பிறகும் நடித்த சிவாஜி
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசன் இறந்த பிறகும் சினிமாவில் நடித்துள்ளார். ஆம்.... அவருடைய இறுதி ஊர்வலம்முழுவதும் திரைப்படத் துறையினரால் படமாக்கப்பட்டுள்ளது.
சிவாஜியின் இறுதி ஊர்வலம் முழுவதையும் படமாக்கும் பொறுப்பை, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கவனித்துக் கொண்டார்.
2 குழுவாகப் பிரிந்து சென்றனர் படப்பிடிப்புக் குழுவினர். ஊர்வலத்துக்கு முன்புறம் ஒரு குழுவும், சிவாஜி உடல்வைக்கப்பட்டிருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரிக்குப் பின்புறம் ஒரு குழுவும் சென்று படப்பிடிப்பைநடத்தின.
சிவாஜியின் வீட்டிலிருந்து, பெசன்ட் நகர் மின் மயான மேடை வரை படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த இறுதி ஊர்வலக் காட்சிகளுடன், சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் இருந்து பல மறக்க முடியாதகாட்சிகளும் இணைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விரைவில் திரையிடப்படும் என்று ஒரு தயாரிப்பாளர் கூறினார்.