தற்கொலை செய்து கொண்ட புலிகள்
கொழும்பு:
கொல்லப்பட்ட 9 விடுதலைப் புலிகள் தவிர தற்கொலைப் படையைச் சேர்ந்த மேலும் சில புலிகள் விமானநிலையத்துக்குள் பதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால், அங்கு தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி 3 புலிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை இயக்கி தங்களைத்தாங்களே சிதைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. மீதமிருந்த 6 புலிகள் ராணுவத்தாக்குதலில் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இறந்துபோன புலிகள் தவிர மேலும் சில புலிகளும் விமான நிலையத்துக்குள் நுழைந்து பதுங்கியிருக்கலாம் எனராணுவத்தினர் கருதுகின்றனர். நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் விமான நிலையத்தை சல்லடைபோட்டு தேடிவருகின்றனர். ஹொலிகாப்டர்கள் மூலமும் தேடுதல் பணி நடக்கிறது.
சமீப காலத்தில் கொழும்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியது இல்லை. இதுதான் சமீபத்தில் நடந்துள்ள மிகக் கடுமையான தாக்குதலாகும்.












Click it and Unblock the Notifications